காதல், திருமணம் கைகூட கௌரி சங்கர் ருத்திராட்சம்!

 

காதல், திருமணம் கைகூட கௌரி சங்கர் ருத்திராட்சம்!

சிவசக்தியின் அம்சமான இரண்டு ருத்ராட்சங்கள் இணைந்து இருக்கும் கௌரி சங்கர் ருத்ராட்சம் அணிவதன் மூலம், அம்மை அப்பனை சேர்த்து இருக்கக்கூடிய பலன் தரும்.

காதல், திருமணம் கைகூட கௌரி சங்கர் ருத்திராட்சம்!

‘ருத்ராக்ஷ தாரணாச்ச ச்ரேஷ்டம் ந கிஞ்சித் அபிவித்யதே’ ருத்ராட்சம் அணிந்து கொள்வதைவிட உயர்ந்த புண்ணியம் வேறு எதுவும் இல்லை என்கின்றன ஞானநூல்கள். இப்படியான ருத்திராட்சத்தை அனைவரும் தரித்து, எல்லாம் வல்ல இறைசக்தியைப் பெறலாம் என்று நம் முன்னோர்களும் வழிகாட்டியுள்ளனர்.
ருத்ராட்சம் என்பது சிவன் முதல் சித்தர்கள், வரை அணியக்கூடிய ஒரு மிக அற்புதமான, மிக சக்தி வாய்ந்த ஒரு பொருளாக பார்க்கப்படுகின்றது. சிவ பெருமான் தன்னை பொன்னால் அலங்கரிக்காமல் ருத்ராட்சம் கொண்டு அலங்கரித்துள்ளார் என்றால் அதன் மகத்துவம் அதிகமாகத் தானே இருக்கும்.

காதல், திருமணம் கைகூட கௌரி சங்கர் ருத்திராட்சம்!

ருத்ராட்சம் என்பது சிவப்பெருமானின் கண் என போற்றப்படுகின்றது.
ருத்ரானான சிவனின் அருளை நமக்கு கொண்டுவருவதற்காக ருத்ராட்சம் அணியப்படுகின்றது. ருத்ராட்சத்தைப் பார்ப்பதும், அணிவதும் மிகப்பெரிய புண்ணியமாக நம்பப்படுகின்றது. ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே புண்ணியம் செய்திருந்தால் தான் வரும் என கூறப்படுகின்றது.
காதல், திருமணம் கைகூட கௌரி சங்கர் ருத்திராட்சம்! சிவபெருமான் சதியை விட்டு பிரிந்த துயரில் இந்த உலகத்தையே மறந்து துறவரம் மேற்கொண்டு, தவத்தில் ஆழ்ந்திருந்தார். மீண்டும் தேவி பார்வதியாக அவதரித்து

காதல், திருமணம் கைகூட கௌரி சங்கர் ருத்திராட்சம்!

சிவப்பெருமானின் மீது காதல் கொண்டு அவரை அடைவதற்காக கடும் தவம் மேற்கொண்டார். தேவியின் தீவிர தவத்தின் பலனாக, நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு தேவிக்கு தன்னுடைய காதல் பரிசாக ருத்ராட்சத்தை கையில் கட்டினார்.
என்னை மீண்டும் இந்த துற வாழ்க்கையிலிருந்து மீட்டெடுத்து, சக்தியுடன் இணைய வைத்த இந்த ருத்ராட்சத்துக்கு கௌரி சங்கரம் என அழைக்கப்படும் என்று சிவப்பெருமான் அருளினார். இந்த ருத் ராட்சத்தை அணிபவர்கள் காதல் தோல்வி, திருமணம் ஆகி கணவன் மனைவிக்கிடையில் நடக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து ஒருவருடன் ஒருவர் விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார்கள். அவ்வளவு சக்தி வாய்ந்தது இந்த கௌரி சங்கர் ருத்ராட்சம். ஓம் நமசிவாய!

-வித்யா ராஜா