கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில், வயது முதிர்ந்த தம்பதி உயிரிழப்பு

 

கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில், வயது முதிர்ந்த தம்பதி உயிரிழப்பு

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் வயது முதிர்ந்த தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள காளிபேட்டை வரதா கவுண்டனூரை சேர்ந்தவர் வெங்கடாஜலம் (77). இவரது மனைவி ராமாயி (70). மகன்களுக்கு திருமணமாகிய நிலையில், வெங்கடாஜலம் மற்றும் ராமாயி ஆகியோர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை ராமாயி வீட்டில் உணவு சமைத்துக் கொண்டிருந்துள்ளார்.

கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில், வயது முதிர்ந்த தம்பதி உயிரிழப்பு

அப்போது, கசிவு ஏற்பட்டு கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த ராமாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வெங்கடாஜலத்தை உறவினர்கள் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.