திருச்சியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து! 4 பேர் உயிரிழப்பு

 

திருச்சியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து! 4 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் நவல்பட்டு பூலாங்குடி காலனி பகுதியில் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் கௌரி (50) விஜய வாணி ( 29) விஜயலட்சுமி (24) விஜயகுமார் (23) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். விஜயகுமார் இன்று மாலை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு எடுத்துவரப்பட்டது.

திருச்சியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து! 4 பேர் உயிரிழப்பு

இந்நிலையில் விஜயகுமார் இறந்த துக்கத்தில் வீட்டிலிருந்த மகள்களும், மனைவியும் வேண்டுமென்றே தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. சிலிண்டர் வெடித்தது? தற்கொலையா? என நவல்பட்டு போலீசார் விசாரணை வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்