குப்பை லாரி மோதி இளம்பெண் பரிதாப பலி: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

 

குப்பை லாரி மோதி இளம்பெண் பரிதாப பலி: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

மதுரை அருகே குப்பை லாரி மோதி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அவனியாபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாபுலால். இவரது மகள் துர்கா தேவி. இவர் துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல பணிக்கு செல்ல தனது அண்ணனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில், துர்கா தேவி ஒரு புறத்தில் இருந்து மறுபக்கம் சாலையை கடக்க முயன்ற போது, பக்க வாட்டில் வந்த மதுரை மாநகராட்சியின் குப்பை லாரி வேகமாக மோதியுள்ளது.

குப்பை லாரி மோதி இளம்பெண் பரிதாப பலி: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

இதில் துர்கா தேவியின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் துர்கா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குப்பை லாரிகள் மட்டுமல்லாது, தண்ணீர் லாரிகள் கூட அதிவேகமாக இயக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.