எஸ்பிபிக்கு பாரத ரத்னா வழங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்: கங்கை அமரன்

 

எஸ்பிபிக்கு பாரத ரத்னா வழங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்: கங்கை அமரன்

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது. திரையுலகினர் மட்டுமன்றி அரசியல் தலைவர்களும் விளையாட்டு வீரர்களும் இரங்கல்கள் தெரிவித்தன. எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு பேசிய நடிகர் அர்ஜுன் பேசும்போது, “எஸ்பிபிக்கு கண்டிப்பாக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்” என்று தெரிவித்திருந்தார்.

எஸ்பிபிக்கு பாரத ரத்னா வழங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்: கங்கை அமரன்

தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன், “பாரத ரத்னா விருது வழங்கும் குழுவில் நானும் ஒரு உறுப்பினர் என்பதால், மறைந்த பாடகர் பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். இசையில் மொழியை பார்க்கக்கூடாது. அனைத்து மொழிகளையும் பாடியுள்ள பாலுவிற்கு நிச்சயம் பாரத ரத்னா கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.