கொள்ளையில் பங்கு கொடுக்கவில்லை… மது கொடுத்து இளைஞர் கொலை… சிக்கிய 7 பேர் கொண்ட திருட்டுக் கும்பல்!

 

கொள்ளையில் பங்கு கொடுக்கவில்லை… மது கொடுத்து இளைஞர் கொலை… சிக்கிய 7 பேர் கொண்ட திருட்டுக் கும்பல்!

வழிப்பறி செய்த நகை, பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த மேல்பாக்கத்தில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு கடந்த 18ம் தேதி தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், சடலத்தை மீட்டு விசாரணையை நடத்தினர். அப்போது, கொலை செய்யப்பட்டவர் தீனா என்று தெரியவந்தது. இந்த சூழ்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு – மாங்கால் கூட்ரோடு அருகே மது அருந்திக் கொண்டிருந்த 7 பேர் கொண்ட ஒரு கும்பல் காவல்துறையினரிடம் சிக்கியது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தீனாவை லோகேஷ் உள்ளிட்டோர் கொலை செய்தது தெரியவந்தது.

அரக்கோணம் அடுத்த சோகனூரைச் சேர்ந்த தீனாவும் (17), மேல்பாக்கத்தைச் சேர்ந்த லோகேஷ் உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டு வருவதோடு, வீடுகளில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர். இவர்கள் கொள்ளையடிக்கும் நகை, பணத்தை அனைவரும் பங்கிட்டு வந்துள்ளனர். இதனிடையே, திருத்தணியில் இவர்கள் நடத்திய வழிப்பறியில் லோகேஷ் உள்ளிட்டவர்கள், தீனாவுக்கு பங்கு கொடுக்கவில்லையாம். இந்த நிலையில், தனது பங்கை தீனா கேட்டு டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால், அவரைக் கொலை செய்ய லோகேஷ் கும்பல் முடிவு செய்துள்ளது.

கொள்ளையில் பங்கு கொடுக்கவில்லை… மது கொடுத்து இளைஞர் கொலை… சிக்கிய 7 பேர் கொண்ட திருட்டுக் கும்பல்!

கடந்த 17ஆம் தேதி தீனாவை மேல்பாக்கத்திற்கு அழைத்து வந்த லோகேஷ் உள்ளிட்டவர்கள் அவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். தீனாவுக்கு போதை அதிகமானதால் அவரை கொன்று போர்வையில் சுற்றியதோடு, கல்லைக் கட்டி கிணற்றில் வீசியுள்ளனர். இந்த நிலையில், போர்வையில் கட்டப்பட்ட கல் கீழே விழுந்துவிட்டதால் சடலம் மேலே மிதந்தது. இதையடுத்து, இந்த கொலை வெளியில் தெரியவந்தது. இதையடுத்து, லோகேஷ், சதாம், கோகுல், அஜித், விஜி, நவீன், சச்சின் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர்.