தலித் இளைஞரை கொடூரமாகத் தாக்கிய கும்பல்: வீடியோ காலில் ஆறுதல் கூறிய திருமாவளவன்

 

தலித் இளைஞரை கொடூரமாகத் தாக்கிய கும்பல்: வீடியோ காலில் ஆறுதல் கூறிய திருமாவளவன்

தஞ்சாவூர் அம்மாபேட்டை பூண்டி மேலத் தெருவை சேர்ந்தவர் ராகுல். 22 வயதான இவரை பக்கத்து கிராமத்தில் வசிக்கும் லட்சுமணன் என்பவர் தனது வீட்டில் 30ஆயிரம் ரூபாயை ராகுல் திருடி விட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் அவரை அழைத்து விசாரித்துள்ளார்.

தலித் இளைஞரை கொடூரமாகத் தாக்கிய கும்பல்: வீடியோ காலில் ஆறுதல் கூறிய திருமாவளவன்

அப்போது தான் பணத்தை எடுக்கவில்லை என ராகுல் கூறிய நிலையில் அதை நம்பாத லட்சுமணன் அவரது கண்ணை துண்டால் கட்டி, இரு கைகளையும் பிடித்து மரத்தோடு நிற்க வைத்து கம்பால் கடுமையாக தாக்கியுள்ளா. இதில் வலியை தாங்க முடியாத ராகுல் கதறி அழ அதை லட்சுமணன் நண்பர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.

தலித் இளைஞரை கொடூரமாகத் தாக்கிய கும்பல்: வீடியோ காலில் ஆறுதல் கூறிய திருமாவளவன்

வலி தாங்க முடியாமல் கதறி அழுத ராகுல் ஒரு கட்டத்தில் மயங்கி விழ லட்சுமணன் தரப்பினர் அவரை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதற்கான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தான் அடிவாங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதால் அவமானத்தில் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார் ராகுல். தற்போது அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் ராகுலை காணொலி காட்சி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள திருமாவளவன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராகுலை வீடியோ காலில் மூலம் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அம்மாபேட்டை போலீஸார். 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து லட்சுமணன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.