காந்தி ஜெயந்தி: ஈரோட்டில் ஒரே நாளில் 6 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

 

காந்தி ஜெயந்தி: ஈரோட்டில் ஒரே நாளில் 6 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

காந்தி ஜெயந்தி அன்று யாரும் மது குடிக்கக்கூடாது என்று அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், கடை விடுமுறை என்பதால் முதல் நாளே வாங்கி ஸ்டாக் வைத்துவிடுகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் ஈரோட்டில் 6 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

காந்தி ஜெயந்தி: ஈரோட்டில் ஒரே நாளில் 6 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

ஈரோடு மாவட்டம் முழுவதும் 211 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. பின்னர் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை முந்தன நாட்களில் வழக்கத்தைவிட விற்பனை அதிகமாக இருக்கும். குடிமகன்கள் அதிக அளவில் டாஸ்மாக் கடைக்கு படையெடுத்து தங்களுக்கு வேண்டிய சரக்குகளை அள்ளி செல்வார்கள். மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.3 கோடிக்கு விற்பனை இருக்கும்.

காந்தி ஜெயந்தி: ஈரோட்டில் ஒரே நாளில் 6 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

இந்நிலையில் இன்று காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட குடிமகன்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை முதல் மதியம் வரை டாஸ்மாக் கடையில் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால் மாலை முதல் கூட்டம் அதிகரித்தது. பீர்களை குடிமகன்கள் விரும்பி வாங்கிச் சென்றனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ரூ.6 கோடியே 12 லட்சத்து 7 ஆயிரத்து 30 ஆயிரத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. இது வழக்கத்தைவிட கூடுதலாக ரூ.2 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.