சூதாட்ட விளம்பரத்தில் கோலி, தமன்னா… மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சூதாட்ட விளம்பரத்தில் கோலி, தமன்னா… மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர் கோலி, நடிகை தமன்னா நடித்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சூதாட்ட விளம்பரத்தில் கோலி, தமன்னா… மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


தொலைக்காட்சி, இணையதளங்களில் ஆன்லைன் சீட்டாட்டம் தொடர்பான விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. விளையாடுபவர்கள் எல்லாம் பணத்தை வெல்லலாம் என்ற வகையில் விளம்பரம் வருகிறது. இதை நம்பி பலரும் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆளாகின்றனர்.

சூதாட்ட விளம்பரத்தில் கோலி, தமன்னா… மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


இந்த விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சூரியபிரகாசம் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில், “சூதாட்டத்துக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். கிரிக்கெட் வீரர் கோலி, தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரம் செய்து மூளைச் சலவை

சூதாட்ட விளம்பரத்தில் கோலி, தமன்னா… மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்கிறார்கள். ப்ளுவேல் விளையாட்டால் மாணவர்கள் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட போது நீதிமன்றம் தலையிட்டு தடை விதித்தது. அதே போன்று ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, இது தொடர்பாக இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மூன்று வாரத்தில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.