பர்னிச்சர் கடையில் திடீர் தீ விபத்து – பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

 

பர்னிச்சர் கடையில் திடீர் தீ விபத்து – பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

கோவை

கோவை அருகே பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ வீபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

கோவை மாவட்டம் வடவள்ளி பொம்மணம்பாளையம் பிரிவு பகுதியில் தனியாருக்கு சொந்தமான பர்னிச்சர் கடை செயல் செயல்பட்டு வருகிறது. இன்று காலை கடையில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மரச் சாமான்கள் இருந்த பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது. ஊழியர்கள் தீயை அணைக்க முயன்ற நிலையில், மளமளவென மற்ற பகுதிகளுக்கு தீ பரவியது. இதுகுறித்து உடனடியாக வடவள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

பர்னிச்சர் கடையில் திடீர் தீ விபத்து – பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், கடையில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் கடையில் வைக்கப்பட்டிருந்த சோபா, கட்டில் மெத்தைகள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. விபத்து குறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தீவிபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.