கோவை மாவட்டத்தில் நாளை முதல் வரும் 27ஆம் தேதி வரை முழு முடக்கம்!

 

கோவை மாவட்டத்தில் நாளை முதல் வரும் 27ஆம் தேதி வரை முழு முடக்கம்!

கோவையில் இன்று மட்டும் புதிதாக 187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 55 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 132 பேர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 54 புறநகர் பகுதிகளிலும், 133 மாநகராட்சி பகுதிகளிலும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,966 ஆக அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் நாளை முதல் வரும் 27ஆம் தேதி வரை முழு முடக்கம்!

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதால் நாளை முதல் மூன்று நாட்களுக்கு முழு முடக்கத்தை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. கோவையில் , வழக்கமாக கடைபிடிக்கப்படும் ஞாயிற்றுக்கிழமை முழுமுடக்கம் இந்த வாரம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கே தொடங்குகிறது. 27 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 6 மணி வரை எந்த தளர்வுகளும் இல்லாத முழுமுடக்கம் நடைமுறைபடுத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய கடைகளை தவிர வேறு எந்த கடைகளும் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.