வடசென்னையில் முழு ஊரடங்கு! மீண்டும் முதலிலிருந்து ஆரம்பம்…

 

வடசென்னையில் முழு ஊரடங்கு! மீண்டும் முதலிலிருந்து ஆரம்பம்…

கொரோனா பரவல் அதிகரித்துவருவதை தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் 5 வது மண்டலமான ராயப்புரம் மண்டலத்திற்குட்பட்ட கொத்தவால் சாவடி, யானைகவுனி, ஏழு கிணறு,ஆகிய பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. வியாபார பகுதிகளை மூட வேண்டும் என்றும் காவல்துறையினர் வியாபார சங்க நிர்வாகிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் இன்று முதல் 14ந்தேதி வரை கடைகளை திறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மிக குறுகலான தெருக்கள் மற்றும் நெருக்கமான வீடுகள் அமைந்துள்ள பகுதியில் ராயபுரத்தி தொற்று வேகமும் அதிகரித்துவருகிறது. போலிசார் மற்றும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக வியாபாரிகளும் கடையை அடைக்க முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.

வடசென்னையில் முழு ஊரடங்கு! மீண்டும் முதலிலிருந்து ஆரம்பம்…

கொத்தவால் சாவடி, யானைகவுனி, ஏழு கிணறு,ஆகிய பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக மே 24 ஆம் தேதிவரை கொத்தவால் சாவடி சந்தை மூடப்பட்டிருக்கிறது.