மாட்டுத்தாவணி பழ அங்காடியை 10 நாட்கள் மூட உத்தரவு! – மதுரை மாநகராட்சி அதிரடி

 

மாட்டுத்தாவணி பழ அங்காடியை 10 நாட்கள் மூட உத்தரவு! – மதுரை மாநகராட்சி அதிரடி

கொரோனா பரவல் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி பழ அங்காடியை 10 நாட்களுக்கு மூட மதுரை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மாட்டுத்தாவணி பழ அங்காடியை 10 நாட்கள் மூட உத்தரவு! – மதுரை மாநகராட்சி அதிரடிமதுரை மாட்டுத்தாவணியில் பழ அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட பழக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. பழ அங்காடியில் கடை வைத்து நடத்தி வருபவர் உள்ளிட்ட நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூலமாக எத்தனை பேருக்கு கொரோனா பரவியது என்று கண்டறிய முடியவில்லை.

மாட்டுத்தாவணி பழ அங்காடியை 10 நாட்கள் மூட உத்தரவு! – மதுரை மாநகராட்சி அதிரடிஇதைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு பழ அங்காடியை மூட மதுரை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று வேறு யாருக்காவது பரவியுற்றதா என்று கண்டறியவும் பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.