இரவில் மது விருந்து… இளைஞரை கழுத்தை அறுத்துக் கொன்ற நண்பர்கள்

 

இரவில் மது விருந்து… இளைஞரை கழுத்தை அறுத்துக் கொன்ற நண்பர்கள்

மதுவாங்கிக் கொடுத்து நண்பனை கழுத்தை அறுத்து கொன்ற 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் கடலூர் அருகே நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூரிலுள்ள புதுநகரை சேர்ந்த ரங்கசாமி என்பவரின் மகன் காமராஜ் ( 22). நேற்றிரவு தனது நண்பர் தேவா உள்ளிட்ட 6 பேருடன் அங்குள்ள நகராட்சி பின்புறம் மது குடித்துள்ளனர். பின்னர் தேவாவுடன் பைக்கில் சென்றுள்ளார காமராஜ். ஜெ.ஜெ.நகர் அருகே தேவாவும், காமராஜிம் வந்தபோது, இவர்களுடன் மது குறித்து மற்ற 5 பேரும் பைக்கில் வந்து மறித்துள்ளனர். அப்போது, திடீரென தேவாயை அவர்கள் 5 பேரும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

காமராஜை பைக்கில் தூக்கி சென்றவர்கள், அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் அந்த 5 பேரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர், காமராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த தேவா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் காமராஜ் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், நண்பர்கள் ஐந்து பேரால் காமராஜ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.