“சேலை கட்டியதால் நடந்த கொலை”-பெண் வேடமிட்ட வாலிபரை அவரின் நண்பர்களே கொல்ல காரணம் என்ன ?

 

“சேலை கட்டியதால் நடந்த கொலை”-பெண் வேடமிட்ட வாலிபரை அவரின் நண்பர்களே கொல்ல காரணம் என்ன ?

பெண் வேடமிட்டு நடனமாடிய ஒரு 17 வயது டீனேஜ் வாலிபரை, வீடியோ எடுத்ததால் அந்த வீடியோவை டெலிட் செய்ய சொன்ன அந்த வாலிபரை அவரின் நண்பர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் தாராவி பகுதியில் அதிர்ச்சியலையினை ஏற்படுத்தியுள்ளது .

“சேலை கட்டியதால் நடந்த கொலை”-பெண் வேடமிட்ட வாலிபரை அவரின் நண்பர்களே கொல்ல காரணம் என்ன ?மும்பை தாராவியில் உள்ள சுபாஷ் நகரில் வசிக்கும் கவுசிக் சுனில் நாராயண் கார் என்ற 17 வயது வாலிபன் அங்குள்ள தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சேலை கட்டிக்கொண்டு ,பெண் வேடம் போட்டு நடனம் ஆடியுள்ளார் .அதை அவரின் நண்பர்கள் அனைவரும் செல்போனில் படம் பிடித்துள்ளனர் .பிறகு அந்த வீடியோவினை பலருக்கு ஷேர் செய்துள்ளனர் .இதனால் அந்த பகுதியிலுள்ள அவரின் நண்பர்கள் அவரின் பெண் வேடமிட்டதை கண்டு கேலி செய்துள்ளனர் .

“சேலை கட்டியதால் நடந்த கொலை”-பெண் வேடமிட்ட வாலிபரை அவரின் நண்பர்களே கொல்ல காரணம் என்ன ?இதனால் மனமுடைந்த சுனில் அந்த நண்பர்களிடம் அந்த வீடியோவை டெலிட் செய்யுமாறு கேட்டுள்ளார் .ஆனால் அவர்கள் மறுக்கவே ,அவர் அரசியல் கட்சியிலிருக்கும் தன் மாமாவிடம் புகார் கூற சென்றுள்ளார் .ஆனால் அவரின் மாமா ஊரில் இல்லாததால் ,திரும்பி வந்துகொண்டிருந்த சுனிலை அவரின் நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு கத்தியால் குத்தியுள்ளார்கள் .இதனால் படுகாயமுற்ற சுனில் அங்கேயே மயங்கி விழுந்து இறந்தார் .பின்பு தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி சுனில் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்த நான்கு வாலிபர்களை கைது செய்தனர் .