மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த நண்பன்… மதுவில் விஷம் வைத்துக்கொன்ற தொழிலாளி கைது!

 

மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த நண்பன்… மதுவில் விஷம் வைத்துக்கொன்ற தொழிலாளி கைது!

கரூர்

கரூரில் மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த நண்பருக்கு மதுவில் விஷம் வைத்துக் கொன்ற கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கரூர் வடக்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் தர்மன் (23). கட்டிட தொழிலாளி. இவர் மாற்று சமூகத்தை சேர்ந்த பேபி ஷாலினியை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளான். இதனிடையே, அதே பகுதியை சேர்ந்த தர்மனின் நண்பர் மோகன் என்பவர், அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது, தனது சமூகத்தை சேர்ந்த பேபி ஷாலினியை காதல் வலையில் வீழ்த்த முயற்சித்து வந்துள்ளார்.

மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த நண்பன்… மதுவில் விஷம் வைத்துக்கொன்ற தொழிலாளி கைது!

மேலும், வீட்டில் யாரும் இல்லாதபோது, வீட்டிற்கு சென்று பேபிஷாலினியை நோட்டமிட்டு வந்துள்ளார். இதுகுறித்து, பேபி ஷாலினி புகார் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த தர்மன், மோகனை கொலை செய்ய தீர்மானித்து உள்ளார். இதற்காக டாஸ்மாக்கில் 2 மதுபாட்டில்களை வாங்கிய தர்மன் அதில், வெள்ளி நகைகளுக்கு பாலிஸ் போட பயன்படும் ஆசிட்டை கலந்து வைத்துள்ளார். தொடர்ந்து, நேற்று தர்மன், மோகன் உள்ளிட்டோருடன் சணப்பிரட்டி காட்டுப் பகுதிக்கு சென்று மது அருந்தி உள்ளார்.

அப்போது, ஆசிட் கலந்த மதுவை குடித்த மோகன் மற்றும் அவரது நண்பர் சசிகுமாருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு மோகன் உயிரிழந்தார். சசிகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார், சந்தேகத்தின் பேரில் தர்மனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மதுவில் விஷம் வைத்து கொன்றதை ஒப்புகொண்டதால், அவரை கைதுசெய்தனர்.