ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்க முதல்வர் உத்தரவு!

 

ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்க முதல்வர் உத்தரவு!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. ஒரு கிலோ சர்க்கரை, அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பை கடந்த 3 மாதங்களாக அரசு இலவசமாக கொடுத்து வருகிறது.

ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்க முதல்வர் உத்தரவு!

இந்த நிலையில் ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்க என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வரும் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே சென்று டோக்கன் கொடுக்கப்படும் என்றும் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான நாள் மற்றும் நேரம் டோக்கன்களிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும், டோக்கனில் இருக்கும் நேரத்தில் மக்கள் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.