குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசம்: தமிழக அரசு அறிவிப்பு!

 

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசம்: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் புதிதாக 1,927பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசம்: தமிழக அரசு அறிவிப்பு!

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,841ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 326ஆக அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த ஒரேவழி அனைவரும் மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசம்: தமிழக அரசு அறிவிப்பு!

இந்நிலையில் தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள சுமார் 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்காக 13.48 கோடி முகக்கவசங்கள் வாங்கப்படவுள்ளன. இதற்காக தமிழக அரசு வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையிலான குழு ஒன்றை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.