அனைத்து அம்மா உணவகங்களிலும் வரும் 30ம் தேதி வரை இலவசமாக உணவு : முதல்வர் பழனிசாமி உத்தரவு!

 

அனைத்து அம்மா உணவகங்களிலும் வரும் 30ம் தேதி வரை இலவசமாக உணவு : முதல்வர் பழனிசாமி உத்தரவு!

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில் அங்கு செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் வரும் 30ம் தேதி வரை இலவசமாக உணவு வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து அம்மா உணவகங்களிலும் வரும் 30ம் தேதி வரை இலவசமாக உணவு : முதல்வர் பழனிசாமி உத்தரவு!

இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு ஏழை எளிய மக்களின் நலன் கருதி அம்மா உணவகங்களை வழங்கப்படும் உணவு விலை இல்லாமல் 31.05.2020 வரை வழங்கப்பட்டு வந்தது. தற்போது சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் தீவிர ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

அனைத்து அம்மா உணவகங்களிலும் வரும் 30ம் தேதி வரை இலவசமாக உணவு : முதல்வர் பழனிசாமி உத்தரவு!

மேலும் முதியவர், பெரியோர் மற்றும் ஆதரவற்றோரின் நலன் கருதி தற்போது இயங்கி வரும் சமுதாய உணவுக் கூடங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு அவர்களின் இல்லங்களுக்கு சென்று விலை இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு தீவிரப் படுத்தப் பட்டுள்ள நிலையில் அப்பகுதிகளில் உள்ள சமுதாய சமையல் கூடங்களில் மேலும் வலுப்படுத்தி போதுமான அளவு உணவு சமையல் செய்து, இந்த உணவை விலையில்லாமல் தேவைப்படும் முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்ற அவர்களின் இல்லங்களுக்கு சென்று வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன். இந்த நடைமுறை நாளை முதல் 30.6 2020 வரை செயல்பாட்டில் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.