திருப்பதியில் செப். 30 வரை இலவச தரிசனம் ரத்து!

 

திருப்பதியில் செப். 30 வரை இலவச தரிசனம் ரத்து!

திருப்பதி கோயிலில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான அனைத்து பூஜைகளும் நடந்து வந்தன. கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன்விளைவால் கொரோனா பாதிப்பு அங்கு அதிகரிக்க தொடங்கியது. இதனால் அங்கு பக்தர்களுக்கான தரிசனம் நிறுத்தப்பட்டது.

திருப்பதியில் செப். 30 வரை இலவச தரிசனம் ரத்து!

இதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் கடந்த 29 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டது. நாள்தோறும் 3000 டோக்கன்கள் வழங்கி இலவச தரிசனம் செய்யப்பட்டு வந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.