அக்காவுடன் கள்ளத்தொடர்பு… தனியார் மில் ஓட்டுநரை சரமாரியாக வெட்டிக்கொன்ற தம்பி!

 

அக்காவுடன் கள்ளத்தொடர்பு… தனியார் மில் ஓட்டுநரை சரமாரியாக வெட்டிக்கொன்ற தம்பி!

தென்காசி

சங்கரன்கோவில் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் மில் ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள குலசேகரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தெய்வானை. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்ததால், தனது சகோதரர் குமார் (36) ஆதரவுடன் மகள்களை வளர்த்து வந்தார். மேலும், ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மில்லில் ஓட்டுநராக பணிபுரிந்த சங்கரன்கோவில் அடுத்த மலைப்பட்டியை சேர்ந்த லட்சுமணதுரை உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

அக்காவுடன் கள்ளத்தொடர்பு… தனியார் மில் ஓட்டுநரை சரமாரியாக வெட்டிக்கொன்ற தம்பி!

ஏற்கனவே திருமணமான லட்சுமணதுரை, மனைவியை பிரிந்து சங்கரன்கோவிலில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இதனால் கள்ளக்காதல் ஜோடிகள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இதனை அறிந்த குமார், தெய்வானை மற்றும் லட்சுமண துரையை கண்டித்து, கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறியுள்ளார். ஆனால், அவர்கள் உறவை தொடர்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்து வெளியேறிய தெய்வானை, லட்சுமணத்துரையின் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை அறிந்த, குமார், அவரது மனைவி ராஜேஸ்வரி உள்ளிட்டோர் மலைப்பட்டிக்கு சென்றிருந்தனர்.

அப்போது, அங்குள்ள கோவில் அருகே லட்சுமணதுரைக்கும், குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமார், லட்சுமண துரையை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையி அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, குருவிக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார், அவரது மனைவி ராஜேஸ்வரி உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.