மட்டனில் வெடிமருந்து வைத்துக் கொல்லப்பட்ட நரி.. வன விலங்குகளுக்கு எதிராக தொடரும் வன்முறைகள்!

 

மட்டனில் வெடிமருந்து வைத்துக் கொல்லப்பட்ட நரி.. வன விலங்குகளுக்கு எதிராக தொடரும் வன்முறைகள்!

கடந்த சில நாட்களாக விலங்குகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கேரளாவில் உணவு தேடி வந்த யானைக்கு அண்ணாச்சி பழத்தில் வெடிமருந்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், உயிரிழந்த அந்த யானை கர்ப்பிணியாக இருந்தது பிரேத பரிசோதனையின் போது தெரிய வந்த நிலையில், அந்த யானை குட்டியின் புகைப்படம் இணைய தளத்தில் வைரல் ஆனது. உயிரிழந்த அந்த குட்டியை பார்த்த அனைவரின் மனமும் நிலைக்குலைந்தது.

மட்டனில் வெடிமருந்து வைத்துக் கொல்லப்பட்ட நரி.. வன விலங்குகளுக்கு எதிராக தொடரும் வன்முறைகள்!

அந்த விவாகாரத்தில் அந்த அண்ணாச்சி பழம் யானைக்கு கொடுக்கப்பட வில்லை என்றும் பயிரை சேதப்படுத்தும் பன்றிகளுக்குகாக வைக்கப்பட்டதை தவறுதலாக யானை சாப்பிட்டு விட்டதாகவும் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தும் உயிரினங்கள் வெடிமருந்து கொல்லப்படும் செயல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது திருச்சியில்,ஜீயபுரம் பகுதியில் பகுதியில் நரி ஒன்று வெடிமருந்து கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

மட்டனில் வெடிமருந்து வைத்துக் கொல்லப்பட்ட நரி.. வன விலங்குகளுக்கு எதிராக தொடரும் வன்முறைகள்!

அப்பகுதியில் வயல்களை சேதப்படுத்தும் வன உயிரினங்களை கண்காணிக்க வன அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் அங்கு ஒரு கும்பல் இருந்துள்ளது. அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர்கள் வைத்திருந்த பையில் உயிரிழந்த நரியின் சடலம் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அந்த நரி மட்டனில் வெடிமருந்து வைத்து கொல்லப்பட்டதும் அம்பலமாகியுள்ளது.