ஜம்மு-காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்

 

ஜம்மு-காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்

ஷோபியன்: ஜம்மு-காஷ்மீர் ஷோபியன் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரில் பிஞ்சோரா பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது திடீரென பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரவாதிகள் மீதும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலின்போது நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இளைஞர்கள் பயங்கரவாத அணிகளில் சேருவதைத் தடுக்கும் கொள்கையின் ஒரு பகுதியாக, கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் அடையாளம் மற்றும் அவர்கள் எந்த தீவிரவாத குழுவை சேர்ந்தவர்கள் என்ற விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.

ஷோபியன் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த இரண்டாவது என்கவுண்டர் மோதல் இதுவாகும். முன்னதாக ரெபன் பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.