“பணத்தையும் தூக்கிட்டு பொண்ணையும் தூக்கிட்டீங்களே” -கொள்ளையர்களால் கொதிக்கும் குடும்பம்

 

“பணத்தையும் தூக்கிட்டு பொண்ணையும் தூக்கிட்டீங்களே” -கொள்ளையர்களால் கொதிக்கும் குடும்பம்


ஒரு வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் அந்த வீட்டில் பணத்தையும் எடுத்துக்கொண்டு அந்த வீட்டிலிருந்த பெண்ணையும் பலாத்காரம் செய்துள்ளார்கள் .

“பணத்தையும் தூக்கிட்டு பொண்ணையும் தூக்கிட்டீங்களே” -கொள்ளையர்களால் கொதிக்கும் குடும்பம்


உத்தரபிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் நானாட்டா பகுதியில் புதன்கிழமை இரவு ஒரு வீட்டில் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள் .அப்போது அந்த வீட்டிற்குள் நான்கு கொள்ளையர்கள் வீட்டின் சுவரை உடைத்து கொண்டு நுழைந்தார்கள் .அங்கு வந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த அனைவரையும் ஒரு கயிற்றால் கட்டி போட்டார்கள் .அதன் பிறகு அந்த வீட்டின் பீரோவிலிருந்து 4.67 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தார்கள் .அதன் பிறகு அவர்களின் கண்ணில் அந்த வீட்டிலிருந்த 16 வயதான பெண் தென்பட்டார் .
அந்த பெண்ணை பார்த்ததும் அந்த கொள்ளையர்களுக்கு அவரை அடைய ஆசை வந்தது .அதனால் அந்த பணத்தையும் தூக்கிக்கொண்டு அந்த பெண்ணையும் தூக்கிக்கொண்டு அருகிலுள்ள ஒரு காட்டு பகுதிக்கு சென்றார்கள்.அங்கு வைத்து அந்த நான்கு பேரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார்கள் .அதன் பிறகு அவர்கள் அந்த பெண்ணை அங்கேயே அனாதையாக விட்டு விட்டு ஓடி விட்டார்கள் .அதன் பிறகு அந்த பெண் மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்து எழுந்து வந்து பெற்றோரிடம் நடந்த விஷயத்தினை கூறினார் .பின்னர் அதை கேட்டு அதிர்ந்த அவரின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார்கள் .அதன் பேரில் போலீசார் கொள்ளை மற்றும் பலாத்கார வழக்கு பதிவு செய்து விசாரித்த போது, தனது கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குற்றவாளிகளை தான் அடையாளம் கண்டுள்ளதாக சிறுமி கூறினார்.போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகிறார்கள் .

“பணத்தையும் தூக்கிட்டு பொண்ணையும் தூக்கிட்டீங்களே” -கொள்ளையர்களால் கொதிக்கும் குடும்பம்