தருமபுரி அருகே இரும்பு ஏற்றிச் சென்ற லாாி – பைக் மீது மோதி விபத்து : 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
Jul 22, 2020, 10:07 IST1595392665000
தருமபுரியில் லாாி– இருசக்கர வாகனத்தின் மீது மோதி கவிழ்ந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தருமபுரி தோப்பூர் அருகே காண வயலில் இரும்பு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியதில் பைக்கில் சென்ற இரண்டு பேர், லாரி ஓட்டுநர், கிளினர் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.