தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவன் கூட்டாளிகளுடன் கைது !!

 

தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவன் கூட்டாளிகளுடன் கைது !!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகே டோடி கிராமத்தில் தனது மைனர் சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக 3 நண்பர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அதே வட்டாரத்தைச் சேர்ந்த ஜிஷன் (இறந்த சிறுமியின் சகோதரர்), சஜித், வாஜித் மற்றும் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மே 17 அன்று சிறுமி காணாமல் போனதாக பெற்றோர் புகாரை போலீசில் பதிவு செய்தனர். சிறுமி வீடு திரும்பாததால். இந்த சம்பவத்தை விசாரித்த போலீசார், மிஸ்ரவாஸ் காடுகளுக்கு அருகே சிதைந்த சிறுமியின் உடலை கண்டுபிடித்தனர். பெற்றோர் தங்கள் மகளின் உடலை அடையாளம் கண்ட பின்னர், பொலிசார் இந்த சம்பவம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரிக்கத் தொடங்கினர்.

தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவன் கூட்டாளிகளுடன் கைது !!

விசாரணையில், ஜிஷன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார், மேலும் அவரும் அவரது நண்பர்களும் வீட்டிலிருந்து சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்டனர். பின்னர், அவர் சிறுமியைக் கொடூரமாக கொன்று காட்டில் வீசி உள்ளனர். சிறுமியின் தனிப்பட்ட பாகங்கள் சிதைக்கப்பட்டு, அவரின் முக்கிய உறுப்புகள் சிதைந்துவிட்டன. இது தொடர்பாக சிறுமியின் அண்ணன் மற்றும் 3 கூட்டாளிகளை கைது செய்த போலீசார் அவர்கள் மீது ஐபிசி பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை), 302 (கொலை), 201 (ஆதாரங்களை அழித்தல்) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் 6 வது பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.