ரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – 4 பேர் பலி

 

ரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – 4 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 4 பேரும் பரிதாபமாக பலியாகினர்.

ரஷ்யாவின் கிழக்கு சுகோட்கா பிராந்தியத்தில் உள்ள விமான நிலையத்தில் இன்று ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இதனால் அந்த ஹெலிகாப்டரில் பயணித்த நான்கு பேரும் பரிதாபமாக பலியாகினர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் மூன்று குழு உறுப்பினர்களும் மற்றும் ஒரு தொழில்நுட்ப வல்லுநரும் இருந்தனர்.

இராணுவம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வந்தது. அது ஒரு மி-8 ரக ஹெலிகாப்டர் என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தொழில்நுட்ப பராமரிப்புக்குப் பிறகு அந்த ஹெலிகாப்டரை சோதனை செய்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.