மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நடந்த அடிக்கல் நாட்டு விழா! – ஜி.கே.வாசன் மகிழ்ச்சி

 

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நடந்த அடிக்கல் நாட்டு விழா! – ஜி.கே.வாசன் மகிழ்ச்சி

அயோத்தியில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது என்று தா.ம.க தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (வியாழன்) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீண்ட காலமாக நீடித்து வந்த ராமஜென்ம பூமி பிரச்னைக்கு உச்ச நீதிமன்றம் ஒரு நல்லத் தீர்ப்பை வழங்கியது.

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நடந்த அடிக்கல் நாட்டு விழா! – ஜி.கே.வாசன் மகிழ்ச்சி

பிரச்னையில் தொடர்புடைய இரு தரப்பினரும் மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள். உலக அளவில் இந்துக்களுக்கு பெருமை சேர்க்கக்கூடிய ராமபிரானின் திருக்கோயில் அயோத்தியில் அடிக்கல் நாட்டு விழா. அன்றைய நிகழ்வில் வழக்குத் தொடுத்தவரில் ஒருவரான முஸ்லிம் அமைப்பைச் சார்ந்த முக்கிய பிரதிநிதி கலந்துகொள்வது, மத நல்லிணக்கத்திற்கும் சிறந்த அணுகுமுறைக்கும் நல்ல எடுத்துக்காட்டாகும்.

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நடந்த அடிக்கல் நாட்டு விழா! – ஜி.கே.வாசன் மகிழ்ச்சி
இத்தகைய இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மற்றும் அனைத்து மதமும் பங்கேற்று நடைபெறுவதும் மற்றும் நேரடியாக தொலைக்காட்சியில் பார்க்கக்கூடிய இந்த நிகழ்வு, இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஒரு எடுத்துக்காட்டு. மேலும், வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில் தேசத்தின் பிரதிநிதியாக பிரதமர் மோடி கலந்துகொண்டது தனிச்சிறப்பு. அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் கம்பராமாயணம் பற்றி பேசியது மகிழ்ச்சிக்குரியது.

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நடந்த அடிக்கல் நாட்டு விழா! – ஜி.கே.வாசன் மகிழ்ச்சி
இந்த மாபெரும் நிகழ்வுக்கு பாடுப்பட்ட தங்களை அற்பணித்துக்கொண்ட குரல் கொடுத்த தலைவர்கள், பக்தர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் இந்த தருணத்திலே போற்றுதலுக்குரிய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஒற்றுமை உலக நாடுகளுக்கே நல்ல செய்தி என்று குறிப்பிட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.