பார்க்கில் மகளோடு படுத்திருந்த பெண் -இருட்டில் பலாத்காரம் செய்த ஆண் -தாயை கெடுத்துவிட்டு மகளை கடத்திக்கொண்டு போன பரிதாபம் .

 

பார்க்கில் மகளோடு படுத்திருந்த பெண் -இருட்டில் பலாத்காரம் செய்த ஆண் -தாயை கெடுத்துவிட்டு மகளை கடத்திக்கொண்டு போன பரிதாபம் .

வடக்கு டெல்லியில் செங்கோட்டைக்கு அருகே இருக்கும் ஒரு பூங்காவில் சனிக்கிழமை இரவு ஒரு 23வயது பெண் அசதியாக தூங்கிக்கொண்டிருந்தார் .அப்போது அந்த இரவு நேரத்தில் அந்த பெண் தூங்குவதை கவனித்த ஒரு நபர், அந்த பெண்ணை கல்லால் அடித்து காயப்படுத்தி , வாயையும் ,கண்ணையும் துணியை வைத்து கட்டிவிட்டு ,பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டார் .

பார்க்கில் மகளோடு படுத்திருந்த பெண் -இருட்டில் பலாத்காரம் செய்த ஆண் -தாயை கெடுத்துவிட்டு மகளை கடத்திக்கொண்டு போன பரிதாபம் .
பிறகு அந்த பெண் அந்த இரவு நேரத்தில் ரத்த வெள்ளத்தில் கத்தமுடியாமல் அங்கேயே கிடந்துள்ளார் .அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபர், ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் அனாதையாக கிடப்பதை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார் .அந்த பகுதியில் ரோந்து வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அணுப்பி வைத்தனர் .பிறகு அந்த பெண்ணை விசாரித்தபோது,தான் ரெகுலராக இந்த பூங்காவில்தான் தூங்குவதாகவும் ,தனக்கு வீடு வாசல் எதுவும் இல்லையெனவும் ,தன்னை கெடுத்தவர் என்னைப்போலவே இந்த பூங்காவில் தங்கும் ஒரு நாடோடி தான் என்றும் அவர் தன்னுடைய மகளையும் கடத்திக்கொண்டு போய் விட்டாரென்றும் அவரை பார்த்தால் தன்னால் அடையாளம் காமிக்க முடியுமென்று அந்த பெண் கூறினார் .இந்த பெண்னின் வாக்குமூலத்தை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .பிறகு காணாமல் போன அவரின் மகளை கண்டுபிடித்து கொடுத்தனர் .இப்போது அந்த பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு ,ரத்தவெள்ளத்தில் விட்டுச்சென்ற நபரை போலீசார் தேடி வருகிறார்கள் .

பார்க்கில் மகளோடு படுத்திருந்த பெண் -இருட்டில் பலாத்காரம் செய்த ஆண் -தாயை கெடுத்துவிட்டு மகளை கடத்திக்கொண்டு போன பரிதாபம் .