பொதுக்குழுவில் இருந்து பாதியில் புறப்பட்ட முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி!

 

பொதுக்குழுவில் இருந்து பாதியில் புறப்பட்ட முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி!

தி.மு.க பொருளாளராக நீண்ட காலம் இருந்த ஆற்காடு வீராசாமி இன்று நடந்த தி.மு.க பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்றார். உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
தி.மு.க பொதுச் செயலாளர், பொருளாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக தி.மு.க பொதுக்குழு இன்று கூட்டப்பட்டது. அந்த பதவிகளுக்கு துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலுவைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை என்பதால் அவர்கள்

பொதுக்குழுவில் இருந்து பாதியில் புறப்பட்ட முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி!

ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க பொதுக் குழு கூட்டம் கூடியது. சில நிர்வாகிகள் மட்டுமே நேரில் பங்கேற்றனர். மற்றவர்கள் ஆன்லைன் மூலம் பங்கேற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று பல முன்னணி தலைவர்கள் அறிவாலயம் வந்தனர். தி.மு.க-வில் நீண்ட காலம் பொருளாளராக இருந்தவரும், ஸ்டாலினுக்காக பொருளாளர் பதவியிலிருந்து விலகியவருமான ஆற்காடு வீராசாமி இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார். வயோதிகம் மற்றும் நோய்ப் பாதிப்பு காரணமாக மிகவும் தளர்வுற்றிருந்தார்.

பொதுக்குழுவில் இருந்து பாதியில் புறப்பட்ட முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி!


பொதுக்குழுக் கூட்டம் நடந்த கலைஞர் அரங்கிற்கு கஷ்டப்பட்டு வந்து தனக்கான இருக்கையில் அவர் அமர்ந்தார். துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, ஆ.ராசா ஆகியோரின் நியமனம் அறிவிக்கப்பட்ட பிறகு, 11 மணி அளவில் மெதுவாக அங்கிருந்து வெளியேறினார். அந்த அரங்கம் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு இருந்ததால் மூச்சுவிட சிரமமாக இருப்பதாகவும்

பொதுக்குழுவில் இருந்து பாதியில் புறப்பட்ட முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி!

வயோதிகம் காரணமாக நீண்ட நேரம் உட்கார முடியவில்லை என்றும் கூறி வீட்டுக்குப் புறப்பட்டார். அவரை தி.மு.க தொண்டர்கள் வழியனுப்பி வைத்தனர். முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தன்னுடைய மகன் டாக்டர் கலாநிதி வெற்றி பெற்ற போது அறிவாலயம் வந்து மு.க.ஸ்டாலினிடம் பேசிவிட்டு சென்றார் ஆற்காடு வீராசாமி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆற்காடு வீராசாமி இப்போதுதான் அறிவாலயம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.