தமிழக முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணண் காலமானார்!

 

தமிழக முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணண் காலமானார்!

தமிழக முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணண் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.

தமிழக முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் உளவுப்பிரிவு டிஐஜியாகவும், சென்னை மாநகர காவல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். சட்டம்-ஒழுங்கு ஐஜி, டிஜிபியாக இருந்தவர் ராதாகிருஷ்ணன்.நேர்மையான அதிகாரியான ராதாகிருஷ்ணன் எழுத்தாளர், சமூக ஆர்வலர் என பல முகங்களைக் கொண்டவர்.

தமிழக முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணண் காலமானார்!

இந்நிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் மறைவையொட்டி அவருக்கு உடலுக்கு தமிழக காவல்துறை சார்பில் உரிய மரியாதை செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் ராதாகிருஷ்ணன் மறைவுக்கு தமிழக காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.