முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உதவியாளருக்கு முன்ஜாமீன்!

 

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உதவியாளருக்கு முன்ஜாமீன்!

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் உதவியாளர் பரணிதரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது .

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உதவியாளருக்கு முன்ஜாமீன்!

நாடோடிகள் படநடிகை சாந்தினி கடந்த சில வாரங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் தானும், மணிகண்டனும் ஐந்து ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்ததாகவும், அவரால் மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுத்த அவர் தன்னை அடித்து கொடுமைப் படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். நடிகை சாந்தினி புகாரை அடுத்து சென்னை அடையாறு மகளிர் போலீசார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் கைது செய்யப்பட்ட அவர் சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உதவியாளருக்கு முன்ஜாமீன்!

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் உதவியாளர் பரணிதரனுக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம். நடிகை பாலியல் புகாரில் மணிகண்டனின் உதவியாளர், ஓட்டுநர் என அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். இந்த சூழலில் மணிகண்டனின் உதவியாளர் பரணிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்த நிலையில், மணிகண்டனுக்கு நடிகையை அறிமுகம் மட்டுமே செய்து வைத்துள்ளார் பரணிதரன். இவர் மீது வேறேதும் புகார்கள் இல்லாததால் அவருக்கு முன்ஜாமீன் அளிப்பதாக நீதிபதி தண்டபாணிவிளக்கமளித்துள்ளார்.