“சிவி சண்முகம் ஒரு பனங்காட்டு நரி” – மாஜி அமைச்சர் கே.சி.வீரமணியால் சலசலப்பு!

 

“சிவி சண்முகம் ஒரு பனங்காட்டு நரி” – மாஜி அமைச்சர் கே.சி.வீரமணியால் சலசலப்பு!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அலுவலகத்தைத் திறந்து வைத்த அவர், ஆயிரம் தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

“சிவி சண்முகம் ஒரு பனங்காட்டு நரி” – மாஜி அமைச்சர் கே.சி.வீரமணியால் சலசலப்பு!

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவிலிருந்து சசிகலா எப்போதோ நீக்கப்பட்டு விட்டார். இதை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பலமுறை சொல்லிவிட்டார். இவ்விவகாரத்தில் அனைத்து அதிமுகவினர் தெளிவாக உள்ளனர். தொண்டர்களைக் குழப்பவே சசிகலா பேசியது போன்ற பொய்யான ஆடியோக்களை வெளியிடுகின்றனர். சசிகலா மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்பே இல்லை.

“சிவி சண்முகம் ஒரு பனங்காட்டு நரி” – மாஜி அமைச்சர் கே.சி.வீரமணியால் சலசலப்பு!

கட்சி உயர்மட்டக் குழு ஒன்று கூடி இதற்கான அறிவிப்பை வெளியிடும். முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு சசிகலா ஆதரவாளர்களிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளை அவர் பலமுறை சந்தித்துள்ளார். சி.வி.சண்முகம் ஒரு பனங்காட்டு நரி. அவர் எந்தச் சலசலப்புக்கும் அஞ்சமாட்டார்” என்றார்.