எச்.டி.குமாரசாமி மற்றும் அவரது மகனுக்கு கொரோனா… வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட தேவகவுடா

 

எச்.டி.குமாரசாமி மற்றும் அவரது மகனுக்கு கொரோனா… வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட தேவகவுடா

கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாராசாமி மற்றும் அவரது மகன் நிகில் குமாராசாமி ஆகியோருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரவமாக உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டி விட்டது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 10 மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

எச்.டி.குமாரசாமி மற்றும் அவரது மகனுக்கு கொரோனா… வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட தேவகவுடா
நிகில் குமாரசாமி

இந்நிலையில் மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சி தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வருமான எச்.டி. குமாரசாமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக குமாரசாமி டிவிட்டரில், கடந்த சில நாட்களாக என்னுடன் நெருங்கி தொடர்பு கொண்ட அனைவருமே தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்க. கோவிட் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார். குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியும் தனக்கு கொரோனா இருப்பதாக டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

எச்.டி.குமாரசாமி மற்றும் அவரது மகனுக்கு கொரோனா… வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட தேவகவுடா
எச்.டி.தேவகவுடா

குமாரசாமியின் மனைவியும், ராமநகர எம்.எல்.ஏ.வுமான அனிதா குமாரசாமி மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளார். முன்னதாக குமாரசாமியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகவுடா கடந்த மார்ச் 31ம் தேதியன்ற கொரோனா சிகிச்சைக்காக மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்ததையடுத்து கடந்த 5ம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.