குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் காலமானார்!
கொரோனா பாதிப்பால் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் காலமானார்.
உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, சாதாரண மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பாரபட்சமின்றி பரவி வருகிறது. அண்மையில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேலின் உதவியாளருக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது. அவருடன் தொடர்பில் இருந்ததால் கேசுபாய் பட்டேலுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதால், அவர் அகமதாபாத் காந்தி நகரில் உள்ள வீட்டில் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் தனிமைப்படுத்தி கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். அவரது கொரோனாவில் இருந்து மீண்டு வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், வயது முதிர்வு காரணமாக உடல்நலம் தேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.