அதிமுகவில் இணைந்த திமுக முன்னாள் அமைச்சர்… பூரிப்பில் எடப்பாடி!!

 

அதிமுகவில் இணைந்த திமுக முன்னாள் அமைச்சர்… பூரிப்பில் எடப்பாடி!!

திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் இணைந்த திமுக முன்னாள் அமைச்சர்… பூரிப்பில் எடப்பாடி!!

திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இதையடுத்து முல்லைவேந்தன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதையடுத்து கட்சி பணிகளில் தலைகாட்டாமல் அமைதி காத்து வந்தவரை தேர்தல் நெருங்கியதால் சமீபத்தில் திமுக தலைமை அணுகி மீண்டும் கட்சியில் இணைக்க திட்டமிட்டுள்ளது.ஆனால் அதற்கெல்லாம் இவர் பிடிகொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது .வெள்ளாளக் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான முல்லைவேந்தனுக்கு அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதால் அவரின் தயவு திமுகவுக்கு தேர்தல் நேரத்தில் தேவை என்று கூறப்பட்டது.

அதிமுகவில் இணைந்த திமுக முன்னாள் அமைச்சர்… பூரிப்பில் எடப்பாடி!!

இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தருமபுரியில் பரப்புரையில் ஈடுபட்டு கொண்டிருந்த முதல்வர் பழனிசாமி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார்.ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக , பாமக போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இது கொங்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணிக்கு பலம் சேர்ப்பதாக உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனின் இணைப்பு அதிமுக கூட்டணிக்கு கூடுதல் பலம் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.