முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்!

 

முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்!

வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்துள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்!

வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ. இவர் காங்கிரஸ் கட்சியில் கவுன்சிலராகவும், அகில இந்திய உறுப்பினராகவும் இருந்துள்ளார். கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். வடசென்னையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட தலைவராக இருந்த இவர் அதன் பிறகு எந்த அரசியலில் பணிகளிலும் ஈடுபடவில்லை.

முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்!

இந்நிலையில் ராயபுரம் மனோ இன்று தமிழக முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் சென்று அதிமுகவில் இணைந்தார். ராயபுரம் மனோ மூப்பனார், வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன். பீட்டர் அல்போன்ஸ், ஞானதேசிகன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நட்புறவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.