ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் – அதிமுகவினர் அஞ்சலி

 

ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் – அதிமுகவினர் அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி, தமிழகம் முழுவதும் அவரது உருவ படத்திற்கு அதிமுகவினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் – அதிமுகவினர் அஞ்சலி

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா கலந்துகொண்டு, ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, ஏராளமான கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். இதேபோல், திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஆயில் மில் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளிலும், ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டு, அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் – அதிமுகவினர் அஞ்சலி

கோவை மாவட்ட அதிமுக சார்பில் அவிநாசி சாலையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு, அக்கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துககும் மேற்பட்டோர் கலந்துகொண்டு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர், கோவை மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது உருவ படத்துக்கு, கோவை தெற்கு எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன், முன்னாள் மேயர் வேலுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்..

ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் – அதிமுகவினர் அஞ்சலி

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில், அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு, அக்கட்சி எம்எல்ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்ரமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிச்சாமி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்