முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் அஸ்வானி குமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

 

முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் அஸ்வானி குமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

முன்னாள் சிபிஐ இயக்குநரும், மணிப்பூர், நாகாலாந்து மாநில முன்னாள் ஆளுநருமான அஸ்வானி குமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் அஸ்வானி குமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அஸ்வானி குமார் இன்று சிம்லாவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் முன்னாள் சிபிஐ இயக்குநராகவும் மணிப்பூர், நாகாலாந்து மாநில முன்னாள் ஆளுநராகவும் பதவி வகித்தவர் ஆவார். தகவலறிந்த அவரது வீட்டிற்கு வந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. கடந்த 2006-2008 ஆம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேச மாநில டிஜிபியாகவும் அஸ்வானி குமார் இருந்துள்ளார்.