எம்.பி வசந்தகுமார் உடலுக்கு பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் நேரில் அஞ்சலி!

 

எம்.பி வசந்தகுமார் உடலுக்கு பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் நேரில் அஞ்சலி!

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் திநகர் நடேசன் தெருவில் உள்ள வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

எம்.பி வசந்தகுமார் உடலுக்கு பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் நேரில் அஞ்சலி!

பின்னர் அங்கிருந்து காமராஜர் அரங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்ட உடல் பின் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.எம்பி வசந்தகுமார் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எம்.பி வசந்தகுமார் உடலுக்கு பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் நேரில் அஞ்சலி!

இந்நிலையில் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் உடலுக்கு பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “உழைப்பால் உயர்ந்தவர் எம்.பி. வசந்தகுமார்; கால்பதித்த துறைகளிலெல்லாம் மிகப்பெரிய சாதனை படைத்தவர். எம்பி வசந்தகுமார் மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு பாஜக சார்பில் எனது இரங்கல்” என்றார்.