“எடப்பாடியாரை முதல்வராக்குவோம்” … திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்பியின் உளறல்!

 

“எடப்பாடியாரை முதல்வராக்குவோம்” … திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்பியின் உளறல்!

அதிமுக முன்னாள் எம்பியும் விழுப்புரம் மாவட்ட அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளருமாக இருந்த லட்சுமணன் இன்று திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின் முன்னிலையில் லட்சுமணன் திமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.

“எடப்பாடியாரை முதல்வராக்குவோம்” … திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்பியின் உளறல்!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் வலுவான அரசு அமைய வேண்டிய தேவை இருப்பதால் தான் திமுகவில் இணைந்துள்ளோம். விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவினரை ஒருங்கிணைக்க அமைச்சர் சிவி சண்முகம் முறையாக செயல்படவில்லை என்றும் கழகத்தில் இணைந்து பாடுபட வாய்ப்பளித்ததற்கு கழக தலைவர் ஸ்டாலினுக்கும், இளைஞரணி செயலளார் உதயநிதிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

“எடப்பாடியாரை முதல்வராக்குவோம்” … திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்பியின் உளறல்!

அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் லட்சுமணன் செய்தியாளர் சந்திப்பின் போது வருகின்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அண்ணன் எடப்படியாரை முதல்வராக.. என்று கூறி (என்ன இருந்தாலும் பழக்கத்தோஷம் போகுமா?) பின்பு சுதாரித்து கொண்டு தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று பதற்றத்துடன் கூறி விடைபெற்றது அங்குள்ளவர்கள் மத்தியில் புன்னகையை ஏற்படுத்தியது.