சசிகலா விரைவில் குணமடைய வேண்டும் : முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ குடும்பத்துடன் வழிபாடு!

 

சசிகலா விரைவில் குணமடைய வேண்டும் : முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ குடும்பத்துடன் வழிபாடு!

சசிகலா விரைவில் குணமடைய வேண்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குடும்பத்துடன் வழிபாடு செய்தார்.

சசிகலா விரைவில் குணமடைய வேண்டும் : முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ குடும்பத்துடன் வழிபாடு!

சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடக சிறைத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. சசிகலா விடுதலை தொடர்பான அறிவிப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சசிகலா தற்போது பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவ கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சசிகலா விரைவில் குணமடைய வேண்டும் : முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ குடும்பத்துடன் வழிபாடு!

இந்த நிலையில், சசிகலா விரைவில் குணமடைய பிரார்த்தித்து நாகர்கோவில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், தனது குடும்பத்துடன் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் வழிபாடு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா கூடிய சீக்கிரம் குணமடைந்து தமிழகத்திற்கு வர வேண்டும். அதற்காக தான் குடும்பத்துடன் பிரார்த்தனை செய்தேன் என்று கூறினார். அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாஞ்சில் முருகேசன், தற்போது சசிகலாவுக்காக வழிபாடு செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.