‘அன்வர் ராஜா கூறியது தவறான கருத்து’ : செல்லூர் ராஜூ பதிலடி ; கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு!

 

‘அன்வர் ராஜா கூறியது தவறான கருத்து’ : செல்லூர் ராஜூ பதிலடி ; கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு!

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு குறித்த அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் கருத்துக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார்.

‘அன்வர் ராஜா கூறியது தவறான கருத்து’ : செல்லூர் ராஜூ பதிலடி ; கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு!

அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா பரமக்குடியில் நடந்த அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், எம்ஜிஆர் ,ஜெயலலிதா பெயரை சொல்ல மறந்ததால் மக்களும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை மறந்துவிட்டனர் .கிராமங்களில் தேர்தல் நேரத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லும் சொல்கிறார்களா என்று தான் மக்கள் எதிர்பார்த்து இருப்பார்கள். ஜெயலலிதா சிறை சென்ற போது 200 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்; தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததால் 300க்கும் மேற்பட்டோர் கொலை செய்திருப்பார்கள்” என்றார்.அன்வர் ராஜாவின் இந்த பேச்சு அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘அன்வர் ராஜா கூறியது தவறான கருத்து’ : செல்லூர் ராஜூ பதிலடி ; கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு!

இந்நிலையில் மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , “எம்ஜிஆர் ஜெயலலிதா படங்களை பெரிதாகவும் ,ஓபிஎஸ் -ஈபிஎஸ் படங்களை சிறிதாக வைத்து தான் பிரச்சாரம் செய்தோம். அதிமுகவின் தோல்வி எதிர்பாராதது. இதற்கு தோழமைக் கட்சிகளும் காரணமல்ல. அன்வர் ராஜா கூறியது தவறான கருத்து ” என்றார்.