ஹத்ராஸ் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யவில்லை! உபி போலீசார் பகீர் தகவல்

 

ஹத்ராஸ் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யவில்லை! உபி போலீசார் பகீர் தகவல்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று தடயவியல் அறிக்கையை மேற்கோள்காட்டி அம்மாநில காவல்துறையின் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 14 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியது. இதனால் நிலைகுலைந்து போன அந்த பெண் டெல்லியிலுள்ள ஜவர்கஹலால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் அங்கிருந்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததுடன், அவரின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டிருந்தது. கொடூரமான தாக்குதல்களுக்கு ஆளான அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தநிலையில் நேற்று சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, இறுதிச் சடங்கிற்காக அப்பெண்ணின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் போலீசாரே எடுத்துச் சென்று அவசர அவசரமாக நள்ளிரவில் தகனம் செய்துள்ளனர்.

ஹத்ராஸ் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யவில்லை! உபி போலீசார் பகீர் தகவல்

இந்நிலையில் உயிரிழந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்று உத்தரப் பிரதேச மாநில காவல்துறையினர் பகீரென தெரிவித்துள்ளனர். தடயவியல் அறிக்கையை சுட்டிகாட்டியுள்ள காவல்துறையினர், கழுத்து எலும்பு முறிவு காரணமாகவே இளம்பெண் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவிப்பதாக கூறியுள்ளனர். தடயவியல் அறிக்கையில், இளம்பெண்ணின் உள்ளுறுப்பில் விந்தணுக்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.