“எடப்பாடி ஓபிஎஸ் மகன சொல்றாரு” – ‘வாரிசு அரசியல்’ குறித்து ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

 

“எடப்பாடி ஓபிஎஸ் மகன சொல்றாரு” – ‘வாரிசு அரசியல்’ குறித்து ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

பல்வேறு கட்சிப் பணிகளை முடித்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் களமிறங்கியிருக்கிறார். திருவாரூரில் தொடங்கிய ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்துவருகிறார். முக்கிய ஆயுதமாக ஜெயலலிதாவின் மரணத்தைக் கையிலெடுத்துள்ளார். இதுதொடர்பான பிரச்சார விவாதம் ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் இரு நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

“எடப்பாடி ஓபிஎஸ் மகன சொல்றாரு” – ‘வாரிசு அரசியல்’ குறித்து ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

ஸ்டாலினைப் போல எடப்பாடியையும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். திமுகவை சரமாரியாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார். அவர் கையிலெடுத்திருக்கும் ஆயுதம் வாரிசு அரசியல். உதயநிதியை சேப்பாக்கம் தொகுதியில் நிறுத்தியதை எதிர்த்து மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொள்கிறார். இச்சூழலில் முதன்முறையாக வாரிசு அரசியல் குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாற்றி இருக்கிறார் ஸ்டாலின்.

Image

சிவகங்கை தொகுதியில் சிபிஐ வேட்பாளர் குணசேகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், “ஓ.பி.எஸ். மகனை நினைத்து வாரிசு அரசியல் என முதல்வர் பழனிசாமி பேசிவருகிறார். முதல்வர் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வருகிறார்; பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். பதவி கொடுத்தவர்களுக்குத் துரோகம் செய்து பாவம் செய்த முதல்வரைத்தான் கடவுள் தண்டிப்பார்” என்றார். முதல் முறையாக வாரிசு அரசியல் குறித்து ஸ்டாலின் பேசியதால் பரபரப்பு எழுந்துள்ளது.