தமிழ்நாட்டில் முதல் முறை… ரிவால்டோ யானை மீண்டும் காட்டுக்குள் – வனத்துறை அசத்தல்!

 

தமிழ்நாட்டில் முதல் முறை… ரிவால்டோ யானை மீண்டும் காட்டுக்குள் – வனத்துறை அசத்தல்!

ரிவால்டோ என உள்ளூர் மக்களால் குறிப்பிடப்பட்ட யானை சுமார் 35 முதல் 40 வயதுடைய ஒரு காட்டு யானை. காட்டு யானையாக இருப்பினும், பல ஆண்டுகளாக மசினகுடி பகுதியில் சுற்றித் திரிந்தது மட்டுமின்றி, அடிக்கடி மக்களின் வசிப்பிடப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து உணவைப் பெற்றுக்கொண்டு, அங்கேயே சுற்றித் திரிந்து வந்தது. தங்கள் பகுதியில் காட்டுயானை சுற்றித் திரிவது சில உள்ளூர்வாசிகளுக்கு அச்சத்தையும் நெருடலையும் ஏற்படுத்தி இருந்ததால், வனத்துறையினர் 05.05.2021 அன்று இந்த யானையைப் பிடித்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெப்பக்காட்டில் ஒரு மரக்கூண்டில் அடைத்து வைத்தனர்.

தமிழ்நாட்டில் முதல் முறை… ரிவால்டோ யானை மீண்டும் காட்டுக்குள் – வனத்துறை அசத்தல்!

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தலைமையிலான குழு இந்நிலை குறித்து முழுமையாக ஆய்வு செய்தது. இக்குழுவில் தலைமை வன உயிரினக் காப்பாளர் சேகர் குமார் நீரஜ் மற்றும் வனத்துறையின் உயர் அலுவலர்களும் இடம் பெற்றிருந்தனர். தமிழக அரசின் ஒப்புதலைப் பெற்ற பின்பு, இக்குழுவானது ரிவால்டோ யானையை வனத்துக்கு மீள அனுப்பி மறுவாழ்வளிக்க முடிவு செய்தது. தமிழகத்தில் ஒரு பிடிபட்ட காட்டு யானையை மீண்டும் வனத்துக்குத் திரும்ப அனுப்பி மறுவாழ்வளிப்பது இதுவே முதல் முறையாகும்.

தமிழ்நாட்டில் முதல் முறை… ரிவால்டோ யானை மீண்டும் காட்டுக்குள் – வனத்துறை அசத்தல்!

இக்குழு கடந்த 25 நாட்களாக இதற்கென மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு, சுமார் கடந்த 48 மணி நேரத்தில் சிறப்பான முறையில் முன் ஏற்பாடுகளைச் செயல்படுத்தி இந்நடவடிக்கையை முடித்துள்ளது. இந்த யானை வனப்பகுதியில் விடத் தெரிவு செய்துள்ள இடம் அதற்கு மிக உகந்ததும், நல்ல தீவன உணவுகள் கிடைக்கக் கூடியதுமான செழிப்பான வனப்பகுதி ஆகும். மேலும், இப்பணியில் ரிவால்டோ யானைக்கோ அல்லது இப்பணியில் ஈடுபட்டுள்ள குழுவுக்கோ எவ்விதக் காயமுமின்றி, முதுமலை புலிகள் காப்பகத்தின் மைய வனப் பகுதிக்கு ரிவால்டோ கொண்டு செல்லப்பட்டது.

தமிழ்நாட்டில் முதல் முறை… ரிவால்டோ யானை மீண்டும் காட்டுக்குள் – வனத்துறை அசத்தல்!

மனித நடவடிக்கைகளால் அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் வன விலங்குகள் அதன் இயற்கைச் சூழலில் மீளப் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரு சிறப்பான முன்னுதாரணமாக இந்நடவடிக்கை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் மனித – வன உயிரின மோதலைத் தவிர்த்து, மனித உயிர்கள் பாதுகாக்கப்படுவதையும் இது உறுதி செய்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.