“பலாத்காரம்தானே செஞ்சான் இதுக்கேண்டி பதட்ட படுறே .” – கணவன் செஞ்ச செயலால் அதிர்ச்சியான மனைவி .

 

“பலாத்காரம்தானே செஞ்சான் இதுக்கேண்டி பதட்ட படுறே .” – கணவன் செஞ்ச செயலால் அதிர்ச்சியான மனைவி .


தன் மனைவியை கெடுத்த கொழுந்தனாரையே கல்யாணம் செய்து கொள்ள தன்னுடைய மனைவியை வற்புறுத்திய கணவரை போலீசார் கைது செய்தார்கள் .

“பலாத்காரம்தானே செஞ்சான் இதுக்கேண்டி பதட்ட படுறே .” – கணவன் செஞ்ச செயலால் அதிர்ச்சியான மனைவி .


உத்தரபிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தின் நியூரியா பகுதியில் வசிக்கும் ஐந்து குழந்தைகளின் தாயாரான ஒரு 34 வயதான பெண், 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்து கொண்டார் .இந்த தம்பதிகள் மாமியார் மற்றும் அந்த கணவரின் தம்பி ஆகியரோடு கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள் .இந்நிலையில் சென்ற ஆண்டு அந்த பெண்ணுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது .அதனால் அவர் சிகிச்சை பெற்று வந்தார் .
அந்த கால கட்டத்தில் அந்த பெண்ணின் கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் .ஆனால் அதன் பிறகு அந்த பெண் உடல்நிலை சரியானது .ஆனால் அந்த பெண்ணின் கணவர் வேறொரு பெண்ணோடு வாழ்ந்ததால் அந்த பெண் தனியாக வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்னின் கணவரின் தம்பி அந்த பெண் தனியாக வசிப்பதை பார்த்து அவரை கெடுக்க திட்டம்போட்டார் .அதனால் கடந்த செப்டெம்பர் மாதம் அந்த பெண் தனியாக இருக்கும் போது அவரின் வீட்டிற்கு வந்து அவரை பலவந்தமாக பலாத்காரம் செய்து விட்டார் .பிறகு இந்த விஷயத்தை அந்த பெண் தன்னுடைய கண்வரிடம் கூறினார் .அதை கேட்டு அவர் அதிர்ச்சியடையாமல் அந்த பெண்ணிடம் ‘உன்னை கெடுத்த என்னுடைய தம்பியை கல்யாணம் செய்து கொள்’ என்று கூறினார் .இதனால் அவர் தனது மாமியாரிடம் கூறியபோது அவரும் அதையேதான் சொன்னார் .இதனால் மனம் வெறுத்த அந்த பெண் அருகிலுள்ள காவல் நிலையத்தில் அனைவரின் மீதும் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணின் கணவர் ,அவரின் தம்பி மற்றும் அவரின் மாமியாரை கைது செய்தார்கள் .

“பலாத்காரம்தானே செஞ்சான் இதுக்கேண்டி பதட்ட படுறே .” – கணவன் செஞ்ச செயலால் அதிர்ச்சியான மனைவி .