பா.ஜ.க.வில் இணைந்த பிரபல கால்பந்து வீரர் அரிந்தம் பட்டாச்சார்யா..

 

பா.ஜ.க.வில் இணைந்த பிரபல கால்பந்து வீரர் அரிந்தம் பட்டாச்சார்யா..

பிரபல கால்பந்து வீரர் அரிந்தம் பட்டாச்சார்யா நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். மேற்கு வங்கத்துக்கு என்னால் முடிந்த சிறந்ததை செய்ய முயற்சி செய்வேன் என அவர் தெரிவித்தார்.

மோகன் பேகன் அணியின் கோல் கீப்பரும், பிரபலமான கால்பந்து வீரருமான அரிந்தம் பட்டாச்சார்யா நேற்று அமித் மால்வியா, மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: நான் எப்போதும் பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.

பா.ஜ.க.வில் இணைந்த பிரபல கால்பந்து வீரர் அரிந்தம் பட்டாச்சார்யா..
பா.ஜ.க.

மேற்கு வங்கத்துக்கு ஏதாவது சிறந்ததை செய்யவும் நான் விரும்பினேன். கால்பந்து ரசிகர்களிடமிருந்து ஏராளமான அன்பு மற்றும் ஆதரவை நான் பெற்றேன். அவர்களுக்கு திருப்பி ஏதாவது கொடுக்க இப்போது எனக்கு கிடைத்த வாய்ப்பு இது. பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் ஏதாவது சிறந்தை செய்ய விரும்புகிறேன். தற்போது நடைபெற்று வரும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும்.

பா.ஜ.க.வில் இணைந்த பிரபல கால்பந்து வீரர் அரிந்தம் பட்டாச்சார்யா..
அரிந்தம் பட்டாச்சார்யா

நான் எனது கேரியரின் உச்சத்தில் இருக்கிறேன். நான் கால்பந்து விளையாடுகிறேன். கடந்த ஆண்டு நாங்கள் இந்தியன் சூப்பர் லீக் தொடரை வென்றோம். இந்த ஆண்டு இந்தியாவின் சிறந்த கோல்கீப்பராக தேர்வு செய்யப்பட்டேன். தங்க கையுறை விருது பெற்றேன். இன்னும் 5 முதல் 6 ஆண்டுகள் விளையாடுவேன். மக்களுக்கு உதவவும் முயற்சி செய்வேன். கால்பந்திலிருந்து விலகிய பிறகு பா.ஜ.க.வின் கீழ் முழு நேர அரசியலில் ஈடுபடும் நோக்கத்தில் உள்ளேன் என தெரிவித்தார்.