“95% நுரையீரல் செயலிழந்து விட்டது” : கண்கலங்கிய அதிமுக அமைச்சர்!!

 

“95% நுரையீரல் செயலிழந்து விட்டது” : கண்கலங்கிய அதிமுக அமைச்சர்!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் காமராஜ் இக்கட்டான சூழலை தாண்டி மீண்டு வந்தார். அவர் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் முதல்வர் , துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க சென்றதெல்லாம் அன்றைய நாளையே பரபரப்பாக மாற்றியது.

“95% நுரையீரல் செயலிழந்து விட்டது” : கண்கலங்கிய அதிமுக அமைச்சர்!!

அத்துடன் அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பல்வேறு கோவில்களில் யாகம், பூஜை ஆகியவை நடைபெற்றது. அமைச்சர் காமராஜ் மீண்டு வரவேண்டும் என ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் ஏந்தி வழிபட்டு சென்றனர்.

“95% நுரையீரல் செயலிழந்து விட்டது” : கண்கலங்கிய அதிமுக அமைச்சர்!!

இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டு வந்த காமராஜ் மீண்டும் தனது ஊர் மக்களை சந்தித்துள்ளார். அவருக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நன்னிலம் தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நேற்று நன்னிலம் ஊருக்கு சென்ற காமராஜுக்கு ஏராளமான தொண்டர்கள் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். தனக்கு உற்சாக வரவேற்பு அளித்ததை கண்ட காமராஜ் கண்கலங்கினார்.

“95% நுரையீரல் செயலிழந்து விட்டது” : கண்கலங்கிய அதிமுக அமைச்சர்!!

அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், எனக்கு கொரோனா வந்து 95% நுரையீரல் செயலிழந்து விட்டது. 4 மணிநேரம் உயிரற்ற உடலாக கிடந்தேன். 7 நாட்கள் நினைவு இல்லை. அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 15 நாட்களாக இருந்தேன். உங்களின் பிரார்த்தனையால் தான் மீண்டு வந்துள்ளேன். இந்த நேரத்தில் எனது உடல் நலம் பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் வாழ்த்திய திமுக தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசர் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.