“கண்டவனோட கருவை சுமந்து கம்பி எண்ண வச்சுட்டியே”-தங்கையால் ஒரு அக்காவுக்கு நேர்ந்த நிலை

 

“கண்டவனோட கருவை சுமந்து கம்பி எண்ண வச்சுட்டியே”-தங்கையால் ஒரு அக்காவுக்கு நேர்ந்த நிலை

மும்பையின் காந்திவ்லியில் உள்ள பீம் நகரில் 35வயதான பெண் குப்பை கூடையில் ஆறு மாத ஆண் குழந்தையின் கருவை வீசி சென்றதாக கைது செய்யப்பட்டார்


மும்பையின் காந்திவிலியில் கடந்த வாரம் ஒரு 35 வயதான பெண்ணின் தங்கை தவறான வழியில் கர்ப்பமாகியுள்ளார் .அதனால் அந்த பெண் அந்த தங்கையின் வயிற்றில் வளரும் கருவை வீட்டிலேயே கலைத்துள்ளார் .பின்னர் அந்த கருவை அவர் ஒரு பையில் போட்டு அருகிலுள்ள குப்பை கூடையில் வீசியுள்ளார் .பொலிஸாருக்கு அந்த குப்பையிலிருந்த கருவை பற்றி சிலர் புகார் கூறினார்கள் .அதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த கரு யாருடையது என்று தீவிர விசாரணை மேற்கொண்டார்கள் .குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண போலீஸ் அதிகாரிகள் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஸ்கேன் செய்தனர்.
அப்போது கருவைக் கொண்ட ஒரு பையுடன் நடந்து செல்லும் ஒரு பெண்ணைக் கண்டார்கள் . சி.சி.டி.வி காட்சிகளின் தரம் குறைவாக இருப்பதால் அவரது முகம் தெளிவாக இல்லை. பின்னர் போலீசார் ஒரு குழுவை அங்கு நிறுத்தி, அதே ஆடைகளை அணிந்த பெண்ணைத் தேடச் சொன்னாரகள்
குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், “இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, சி.சி.டி.வி காட்சிகளில் காணப்பட்ட சந்தேக நபரைப் போலவே அதே ஆடை அணிந்த ஒரு பெண்ணைக் கண்டோம். பின்னர் நாங்கள் அவரை ப் பின்தொடர்ந்து அவரது வீடியோவைப் பதிவுசெய்து அதை அந்த பெண்ணுடன் ஒப்பிட்டோம். காட்சிகளில் காணப்பட்டது போல அந்தப் பெண்ணின் நடையும் ஒரே மாதிரியாக இருப்பதையும் நாங்கள் கவனித்தோம், பிறகு அவரை அவருடைய வீட்டிற்குப் பின்தொடர்ந்து சென்று . நாங்கள் அவரை கைது செய்தோம் “என்றார் .

“கண்டவனோட கருவை சுமந்து கம்பி எண்ண வச்சுட்டியே”-தங்கையால் ஒரு அக்காவுக்கு நேர்ந்த நிலை